சென்னை: 15, 16, 17 ஆகிய தேதிகளில் அனைத்து கடற்கரைகள், பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்கள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.